மசாலா மட்டன் பிரியாணி செய்வது எப்படி?

4 sec read

mutton biryani food photography 162831 2

பொதுவாகவே மட்டன் பிரியாணி பலருக்கும் வீட்டில் செய்வதை விட கடைகளில் வாங்குவதையே விரும்பி உண்பார்கள், ஏனெனில் வீட்டில் செய்வதை விட கடைகளில் சுவை மற்றும் மனம் அருமையாக இருக்கும் அப்படிப்பட்ட சுவையான மட்டன் பிரியாணியை வீட்டில் செய்வது எப்படி என்பதை காண்போம்.

மசாலா மட்டன் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:

  • ஆட்டுக்கறி – 1 கிலோ
  • பாஸ்மதி அரிசி – 1 கிலோ
  • பெரிய வெங்காயம் (பொடியாக நறுக்கியது) – 200 கிராம்
  • பச்சை மிளகாய் – 3
  • சீரகம் – 1 டீஸ்பூன்,
  • கரம்மசாலாத் தூள் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • ரோஸ் வாட்டர் – 1 டீஸ்பூன்
  • இஞ்சி-பூண்டு விழுது – 2 ஸ்பூன்
  • தயிர் – 100 மில்லி
  • முந்திரி – 50 கிராம்
  • மஞ்சள் தூள் – 5 கிராம்
  • குங்குமப்பூ – சிறிதளவு
  • கொத்தமல்லித்தழை
  • புதினா – தலா 50 கிராம்
  • காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள்ஸ்பூன்
  • எண்ணெய் – 100 மில்லி
  • நெய் – 50 மில்லி
  • பட்டை – 2, ஏலக்காய் – 4,
  • எலுமிச்சைப்பழம் – ஒன்று
  • கிராம்பு – 4, பிரிஞ்சி இலை – ஒன்று
  • உப்பு – தேவையான அளவு.

இவற்றில் முடிந்த வரை எண்ணெய் மற்றும் நெய் போன்றவற்றை சுத்தமான நிறுவனங்களின் பொருட்களை பயன்படுத்தவும்.

…..

செய்முறை :

கழுவிய பாஸ்மதி அரிசியை 30 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, பசு நெய் ஊற்றி உருகியதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து சிவக்க வறுக்கவும்.

பின்னர் பாஸ்மதி அரிசியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேக வைக்கவும். 

ஒரு பாத்திரத்தில் இஞ்சி-பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எலுமிச்சைச் சாறு, தயிர், உப்பு சேர்த்து கலக்கி, ஆட்டுக்கறியை சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும் 

அடுப்பில் ஒரு பெரிய பாத்திரத்தை வைத்து மரச்செக்கு நல்எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் போட்டு பொரிய விட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

இதில் கரம் மசாலாத் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கியதும், ஊறிய ஆட்டுக்கறியை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும். 

இத்துடன் வேகவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து, பின்னர் பசு நெய் ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழை, புதினா, முந்திரி தூவி மூடவும்.

சிறிது தீயை குறைத்து பிரியாணி பாத்திரத்தை வைத்து 30 நிமிடம் தம் போட்டு இறக்கிப் பரிமாறவும். 

இதோ நம் வீட்டில் சுவையான் மட்டன் பிரியாணி ரெடி.

…..

மரச்செக்கு எண்ணெய் மற்றும் நெய் வாங்க இடம் :

ஸ்டேண்டர்டு ஸ்டோர்

புதிய எண்: 104. பழைய எண் : 42

வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.

மேலும் தொடர்புக்கு

அழைப்பு எண் : 09677227688

வலைதள விவரம்: https://standardcoldpressedoil.com/

Originally posted 2020-01-04 14:04:15.

Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!
Praveen I've been a Tamil writer for the last seven years for a few famous brands and press releases. Lucky enough to work for Standard Oil on countless topics and their newsletters. I am always happy to write!

எலுமிச்சை பழமும் அதன் பயன்களும்

எலுமிச்சை – எல்லா பழங்களையும் எலி கடித்து விடும் ஆனால் எலுமிச்சையை மட்டும் எலி தொடவே தொடாது. எலிமிச்சம் வைத்ததால்தான் எலிமிச்சை என்று பெயர் வந்திருக்கலாம் என சித்தர்கள் மூலம் அறியப்படுகிறது. எலுமிச்சை...
Kaaveri
4 sec read

அறுசுவைகளும் அதன் பயன்களும்

1.இனிப்பு – தசையை வளர்க்கும். 2.புளிப்பு – தேவையான கொழுப்பை தரும். 3.உவர்ப்பு – தேவையான உமிழ் நீரை சுரக்க செய்யும். 4.கார்ப்பு – எலும்புகளை வலுப்பெற செய்யும். 5.கசப்பு – நரம்புகளை...
Kaaveri
2 sec read

கொரோனா வைரஸில் இருந்து தப்பிக்க சில மூலிகைகள்:

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இன்று இந்தியாவிலும் பரவி முப்பதிற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது இந்த நிலையில் அந்த அச்சுறுத்தலான கொரோனா வைரஸ் இல் இருந்து தப்பிப்பது எப்படி என்பதை...
Praveen
1 sec read

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Exit mobile version