இன்று உலகையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸுக்கு பாதிக்கப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகவே உள்ளது இந்த நிலையில் கொரோனா வைரஸ் வராமல் நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதை காண்போம்.
நோயெதிர்ப்பு சக்தி :
கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்க முதலில் நாம் அதிக அளவிலான ஊட்டசத்துகள் நிறைந்த உணவுபொருட்களை உட்கொள்ளுதல் அவசியம். சத்தான காய்கறிகளையும் பழவகைகளையும் உண்ணுதல் அவசியம்.
சுத்தமாக இருத்தல் :

நம் கைகளை அரை மணிநேரத்திற்கு ஒருமுறை நன்றாக சோப்புபோட்டோ அல்லது சானிடைசர் போட்டு கைகளை குறைந்தபட்சம் 30 நொடிகள் கழுவுதல் அவசியம் , முடிந்த வரை வெளியில் செல்வதை தவிர்த்தல் நலம்.
தூய சிந்தனை :

நம் மனதில் எப்போது நமக்கு எந்த நோயும் வராது என்ற நினைவினை மனதில் உண்டாக்குவது அவசியம் , தூய சிந்தனையும் மன தைரியமும் நம்மை எல்லா நோயிலிருந்தும் பாதுகாப்போம்.
தேவையான பொருட்களை சேமித்தல் :

நமக்கு தேவையான அத்யாவசிய பொருட்களை வீட்டில் சேமித்தல் அவசியம். பொருட்கள் வாங்க அடிக்கடி வெளியே செல்வதை தவிர்த்தல் நலம்.
சமூக இடைவெளி :
வெளியே செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்ப்பட்டாலும் அல்லது கடைகளுக்கு செல்லும்போதும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் அவசியம் .
இந்த நடைமுறைகளை கடைபிடிப்பதன் மூலமாக கொரோனா என்னும் கொடிய வைரஸிலிருந்து ஈசியாக பாதுகாப்பாக இருக்கலாம்.
ஸ்டேண்டர்டு ஸ்டோர்
புதிய எண்: 104. பழைய எண் : 42
வால்மீகி தெரு, திருவான்மியூர், சென்னை, தமிழ்நாடு- 600041.
*மேலும் தொடர்புக்கு*
அழைப்பு எண் : 09677227688
வலைதள விவரம் :
https://www.standardcoldpressedoil.com/
Originally posted 2020-04-02 20:27:55.